கலங்கடிக்கும் கதறல்
எனக்கே தெரியவில்லை...,
எதற்காக வாழ்கிறேன்...?
யாருக்காக வாழ்கிறேன்...?
எதைநோக்கி நகர்கிறேன்..?
சாய்வதற்கு தோள் எங்கே...?
துன்பத்தில் ஆறுதல் எங்கே...?
தேவைகளில் உதவி எங்கே...?
இதயத்திற்கு துணை எங்கே...?
களைப்பை தணிக்கும் மடி எங்கே...?
தைரியம் தரும் நம்பிக்கை எங்கே..?
பதில் இல்லாத
கேள்விகள் ஆயிரம்...
நட்புகளின் கரம் உடனிருந்தும்...,
தனிமை என்னை
தோற்கடித்து விடுகிறது...!
ஒவ்வொரு முறையும்,
தேற்றித்தான் பார்க்கிறேன்......!
ஆறுதலும் அறிவுறையும்
மூளையை எட்டி
மனதை தொடுவதற்குள் -ஏனோ
ஆங்காங்கே தேங்கிவிடுகிறது...
துரோகங்கள் வதைக்கிறது......
அனைத்திற்கும் காரணம் ஒன்றே....!
உடன் பயனிக்க வந்த
உற்ற துணையின்
உயிர் உலகை நீங்கி
எனை தனிமைப்படுத்தியதால்....!
தனிமையில் வாழ்வை
போராடி வாழும்
வாழ்விழந்தவளின்
ஆழ்மனதின் அழுத்தம்......
- written by JERRY

