கூடாத சகவாசம்
எடுத்துக்கல அவகாசம்..!
வயித்துல வளந்தது
குப்பையில சேந்தது..!
வெயிலுக்கு வீடில்ல...
மழைக்கு குடையில்ல..
போட்டுக்க துணியில்ல..
வயித்துக்கு சோறில்ல..
வளத்துவிட ஆளில்ல...
எங்கேயோ திரிஞ்சி...
வீதியில உறங்கி...
எப்படியோ வளந்து...
தூக்கியெறிஞ்ச பாவி
பேர சொல்லி சொல்லி
அம்மா தாயின்னு
கையேந்தி நிக்குது....!
இரக்கமுள்ள சில
மனுசங்க ஈரத்துல
வயித்த கழுவுது....!
பழி ஒருயிடம்
பாவம் ஒருயிடமுன்னு
வீதிக்கு ஒன்னு
வழியில்லாம நின்னு
வறுமையில வாடுது....
பதறுது மனசு- இந்த பச்சிகள பாக்கையில...
ஆதரவு கொடுக்கும்
அனாத இல்லத்துக்கு
ஆதரவு கொடுப்போம்....
- written by JERRY
No comments:
Post a Comment