கண்களில் கண்ணீர் இல்லை.....
இரத்தம் மட்டுமே..............
தண்ணீரை தாரை வார்த்தாய் ....
தாகத்தை அடக்க சொல்லி....
விவசாயிகளை தெருவில்
நிறுத்தினாய்......
மானத்தை துறக்க சொல்லி.....
சுவாசத்தை கெடுத்தாய்....
கேன்சரை அனுபவிக்கச்சொல்லி.....
எதிர்த்து கேட்டோம்
அடித்து விரட்டினாய்.....
தாங்கிக் கொண்டு
தொடர்ந்தோம் போராட்டத்தை......
பணத்தின் வெறியாட்டம்
மனிதத்தை மறக்கடித்தது.....
ஜாதிகளும் மதங்களும்
பிரிவனை மறந்து
இணைந்தது தன்
இனத்தின் அழிவை தடுக்க....
இறுதியில் எல்லாம்
தோற்றுப் போனது......
சுயநலவாதிகளின் சுயநலத்தில்
சுவாசக்காற்றை மீட்க
களம்கண்ட சொந்தங்கள்
காணதேசம் சென்றுவிட்டனரே.....
என்ன பாவம் செய்தனரோ
படுகொலை செய்ய
துணிந்தது ஏனோ........
உரிமையை கேட்டோம்
உயிரை பறித்தது ஏனோ.......
பணத்தில் நிரப்ப முடியுமோ
குடும்பத்தின் இழப்பை.....
படு கொலைக்கு
பதில் வேண்டும்......
இழப்பு எங்களுக்கானது......
வலியை நிச்சயம்
உணர்த்துவோம்.......
உணர்த்தும் வரை ஓயாது........
எங்களின் துடிப்பு......
- written by JERRY
No comments:
Post a Comment