Monday, 21 May 2018

தன்னிலை

தவறு செய்வது,
மனித இயல்பு...!

செய்த தவறை...
உணர்ந்து வருந்தி,
கலங்கும் உள்ளத்தை...
குத்திக் காட்டி,
குறைகள் சொல்லி,
தள்ளி வைத்து,
காயப்படுத்தும் உள்ளங்களே...
சிந்திப்போம் ஒரு கணம்...

வயதின் முதிர்ச்சியை விட,
மனதின் முதிர்ச்சியால்...

தவறுகளுக்காய் - ஒருவரை
தவிர்ப்பதை தவிர்த்து,
தட்டிக் கொடுத்து,
உள்ளத்திற்கு உணர்த்திவிட்டால்...!

தவறுகள் தவறுதலாகக்கூட,
தவறு செய்ய
தயங்கி நிற்கும்...!

காலத்தின் கைகளில்...
நாமும் தவறிழைக்கும்,
நிமிடங்கள் நிச்சயமுண்டு...!

தயங்காமல் வார்த்தைகளால்...
தாக்கும் வலிகள்...
வலியவரையும், வறியவராக்கிடும்...!

தன்னிலை மறந்தவராய்...
தடுமாறி விடாமல்...
என்னிலையிலும் தன்னிலையோடு,
தனித்து நிற்போம்...!

- written by JERRY

No comments:

Post a Comment