தொலஞ்ச வாழ்க்கை,
தூரத்துல நிக்குது...!
இழப்புகள் ஏராளமாய்,
இழந்து கிடக்குது...!
ஏமாற்றங்கள் எப்பவும்,
ஏமாத்தாம தாக்குது...!
கவலைகள் வாழ்க்கயின்,
கனவையெல்லாம் கலைக்குது...!
மத்தவங்கள குத்தஞ்சொல்ல,
மனசு விரும்பல...!
முழுசா மூலையில,
முடங்கிடவும் முடியல...!
அப்படி இப்படின்னு...
பொலம்பித் தவிக்குது,
பலமனசு பூமியில...!
சாக்குப்போக்கு சொல்லி...
சரிஞ்சி கிடக்காம...
திறமைய உனக்குள்ள,
தேடித்தான் பாரு...!
தினமும் நீயத வளக்க...
தடையத் தாண்டி,
ஓடித்தான் பாரு...!
வெற்றிய இலக்கா...
விடாம நீயும்,
துரத்தித்தான் பாரு...!
வியப்பான வாழ்க்கை...
விருந்தா வர்றத...
பொறுமயா - நீ
வேடிக்கை பாரு...!
- written by JERRY
No comments:
Post a Comment