Sunday, 13 May 2018

அம்மா

கருவில் கலந்தேன்
உயிராய் வளர்தாய்...
மண்ணில் பிறந்தேன்
மார்பில் சுமந்தாய்....

இரத்தத்தை பாலாக்கி
உணவாய் ஈந்தாய்....
எனது காயங்களை
உனது வலியாய் துடித்தாய்...
மாசற்ற அன்பை
மாறாமல் தந்தாய்....

என் தவறுகளை
எனக்கு மன்னித்தாய்....
எனக்காகவே வாழ்கிறாய்...
என்னையே உன்
வாழ்க்கையாய் வாழ்கிறாய்....

காணா உருவமாய்
கருவில் தொடங்கி
கல்லறை வரை
மாறமல் வாழும்
அன்பிற்கு இனிய
அன்னையர் தின வாழ்த்துகள்.......
     
- written by JERRY

No comments:

Post a Comment