Thursday, 24 May 2018

இது வெறும் கண்துடைப்பிற்கா...?

என் மக்களின்,
எதிர்ப்பு எப்படியோ....
எட்டியது அரசின்,
செவிகளில்...!

போராட்டங்களின், அமைதியை...
போர்க்களமாக மாற்றி...!
ஆளும் கட்சிகள்,
ஆளாத கட்சிகள் - எல்லாம்
ஆழமாக அரசியல்,
ஆதாயம் தேடிக்கொண்டார்கள்...!!

காவல்துறயை எதிரயாகவும்...!
அரசியல்வாதிகளை ஆறுதலாகவும்...!!
அழகாக சித்தரித்து விட்டீர்கள்...!!!

பணமும், அரசுவேலையும்...
ரத்தத்திற்கு விலையானது...!

உயாரிழப்பை தடுக்க...
உரிமைக்காக போராடினோம்...!
வருமானம் வற்றிப்போகும்,
வருத்தம் கூடிப்போனதில்...!!

வொறித்தனமாக வேட்டையாடி...!
வீதியில் வீசிவிட்டு...!!
விசாரணை ஆணையம் ....
யாரை விசாரிக்க நாடகமோ...!!!

உயிரை பறித்துக்கொண்டு...
உணர்வுகளை அடக்கிக்கொள்ள,
கேட்டுக்கொள்ளும் அசிங்கம்...!

மாட்டுக்காய் இணைந்தவர்கள்...
மனிதத்தை மறந்தார்கள் - பாவம்
மனித்ரகள்தானே அவர்களும்...!

எங்களுக்கான அரசென்று,
நம்புகிறோம் நம்பிக்கையிலல்ல...!
மனதில் கலந்த கட்டாயத்தில்...!!

காசுக்காக காவு வாங்கி,
சிதைத்துவிட்ட உயிர்கள்...
உயிரகளாக தெரியவில்லையோ...!

மனித உரிமை ஆணையம்,
நீதிமன்றங்கள் - எல்லாம்
வேடிக்கை பார்க்க மட்டும் தானோ...!

வேடிக்கை பார்த்து...
வருந்தபவர்களுக்கு -  ஒருநாள்
நாங்களும் வருத்தம்,
தெரிவிக்கும் நாள் வரும்...!

திட்டங்கள் பல காத்திருக்கிறது...!
உங்கள் மண்ணையும் அழிக்க...!!
அன்று எங்கள் உள்ளம்...
வேடிக்கை பார்க்காது...!
நிச்சயம் இணைந்திருக்கும், உங்களோடு...!!

உப்பிடும் எங்கள் உள்ளத்திற்கு...
உதவும் உணர்வுகள் அதிகம்...!

இனி இருப்பவர்களையாவது,
வாழ விடுங்கள்...!

பரபரப்பான செய்திகளுக்காக...
எங்களை சூரையாட வேண்டாம்...!
எங்களுக்காக இரங்கியவர்களுக்கு...
எங்களின் நன்றிகள்...!!

எங்களுக்காய் உயிரிழந்தவர்களுக்கு,
எதை ஈடுசெய்ய செய்ய...!
கண்ணீரில் மறைகின்றது கண்கள்...!!

ஆலை மூடும் உத்தரவு...
கண்துடப்பாக இருக்காது - என்றே
நம்புகிறது ஏமாளி உள்ளம்...!

மறதியில் மறந்துவிட்டு...
அடித்த நிகழ்வை ரசிக்க,
வழக்கம்போல் தயாராகுவோம்...!

அதுதானே மனித இன...
அவமானத்தின் உச்சகட்டம்...!!!

 
- written by JERRY 

       

No comments:

Post a Comment