பட்டப்படிப்பு படிச்சு முடிச்சி...
பட்டணத்துல வேலை கிடச்சி...
படிப்புக்கேத்த மாப்புள்ளய புடிச்சி...
கல்யாணத்தையும் கட்டி வச்சி...
வாடகைக்கு குடியும் வச்சி...
பட்டணத்து வாழ்க்கைய,
பகட்டோடு வாழ -இராப்பகல்
பாக்காம ஓடவச்சி...
கொஞ்சம் ஓஞ்சி இருக்கையில,
கொழந்தையையும் பெத்து வச்சி...
பொறுப்பு கூடிப்போச்சுன்னு-ஒரு
நொண்டி சாக்கையும் சேத்துவச்சி...
பணம் சம்பாதிக்க ஓடிப்புட்டு...
பிள்ளயப் பாக்க நேரமில்லன்னு,
வேலைக்கு ஆளு வச்சி
பிள்ளையவிட்டு விலகவச்சி...
என்னடா வாழ்க்கை இது
பிள்ளையா...?
வேலையா...?
என்று யோசிச்சா...!
பாழாப்போன பணத்தேவை...
ஒரு அடி முன்னநின்னு
வேலையத் தேடி ஓடவைக்குது...!
பிள்ளயோட எதிர்காலத்துக்குன்னு,
நிகழ்காலத்த மறக்கவைக்குது...!!
- written by JERRY
No comments:
Post a Comment