Saturday, 7 July 2018

வகுப்பறை வாசல்

புதிய அனுபவம்
புதிய பிரிதல்
மழலையின் முதல்
கால்தடம் பள்ளியில்.....!!

வகுப்பறை வாசலில்
ஆசிரியரின் அழைப்பு
புதியதொரு மொழியாய்
உள்ளுக்குள் பயம்...!!!

அம்மாவின் கரங்களை
இருக்கமாக பிடித்த
பிஞ்சு கரங்கள்.....!!!!

அம்மா வாசல்லையே
உன்கூட உக்காந்திருப்பேன்
நீ அழாம படிச்சிட்டு வா
அம்மா இங்கயே இருக்கேன்-என்ற
சமாதானப் பேச்சு.....!!!

அழுது வடியும் கண்களோடு
வகுப்பறையில் மாணவனாய்
முதல் நாள் தொடக்கம்......!!!

பள்ளி வாசலை
கடந்து செல்லும் தருணம்....!!!

 மகனின் கண்ணீரில்
பாசத்தின் வெளிப பாடும்...!!

பிள்ளையின் இலக்கை
தொடங்கி வைத்த
ஆனந்தத்தின் வெளிப்பாடும்.... !!!

 வழிந்து ததும்பியது
ஆனந்த கண்ணீராய்....
அன்னையின் கண்களில்......!!!
                 
written by JERRY 



No comments:

Post a Comment