வாழ்வின் சவால்கள்
வளர்ந்துகொண்டே வருகிறது...!!!
சமூகத்தில் சாதிக்க
சகலவித்தையும் தேவை....!!!
விதைத்த விதையின்
வளர்ச்சிகள் வீணாகாமல்...,
ஆண்டுக்கொரு கிளையாய்
தளர்வின்றி தளிர்க்கின்றது.....!!!
இந்த ஆண்டின்
வசந்தமும் மலர்ந்துவிட்டது....!!!
எட்டிப்பார்க்கும் கனவுகள்
ஏணிகளைத் தேடுகின்றது....
தண்டிப்புகளால் அதைத்
தவிர்த்து விடாமல்....!!!
அன்பு கலந்த கண்டிப்பில்
அவர்களை ஏற்றிவிடுவோம்...!!
கற்றல் புதுமைகளை
கற்க ஓடட்டும்....
கற்பித்தல் புதுமைகளை
விருந்தாய் படைக்கட்டும்....
ஆசிரியர் பணியை
கடமையாக அல்லாமல்..
மாணவர்களின் வளர்ச்சியை,
இலக்கில் நிறுத்தும்
லட்சியத்தோடு பணிசெய்வோம்...!
தடைகளால் தேங்கவிடாமல்
தட்டிக் கொடுத்து ,
தூக்கி எழுப்பும்
தோழமைகளாய் உழைப்போம்....!!
ஆசிரயராய் ஐந்தாண்டுகள்
மாணவர்களோடு வாழ்ந்துவிட்டு....!!
மாணவரில்லா வெறுமையில்,
அலுவலகப்பணி சலிப்பை
சற்று அதிகமாக்குகிறது...!
மனதும் ஏங்குகிறது
ஆசிரியராக மீண்டும் மாறிட....!!
ஆசிரியர் சமுதாயமே
விடுமுறையில் சிறகை
விரித்த சிட்டுக்களை
கூண்டு பறவைகளாக்காமல்...!!
மனதிற்கு மகிழ்ச்சியையும்...!
திறமைக்கு சவால்களையும்...!
அள்ளிக்கொடுத்து-அவர்களை
சாதனையாளர்களாக மாற்றும்...,!!!
இந்த கல்வியாண்டு
இனிதாய் பிறந்திட
ஆசிரியர்கள், மாணவர்கள், கல்வியாளர்கள் அனைவருக்கும்
அன்பு வாழ்த்துகள்...!
written by JERRY

No comments:
Post a Comment