Saturday, 16 June 2018
Wednesday, 13 June 2018
ஜன்னலோர பயணம்
**********************
ஜன்னலோர பயணம்
**********************
பேருந்தில் சன்னலோரமாய்
வேடிக்கை பார்த்த கண்கள்
கண்ட காட்சிகள் ஏராளம்.......!!!
சிந்திக்க வைத்த
ஒரு காட்சி சற்று
மனதை உலுக்கியது....!!!
இருபத்தைந்து வயது
வாலிபர்கள் இருவர்...
ஒருவர் பேருந்தின் உள்ளே....
மற்றொருவர் பேருந்தின் வெளியே...!!!!
பேருந்தினுள்
பணக்கார தோற்ற வாலிபன்....
அருகில் காதலி...
கடற்கரைக்கு பயணச்சீட்டு......
கவலையெல்லாம் எப்படி
பொழுதைக் கழிப்போம் என்பதே.....!!!
பேருந்தின் வெளியே
அழுக்கு உடை
அடுக்கிய மூட்டைகள்...
வண்டியழுத்தும் வாலிபன்....
கவலையெல்லாம் எப்படி
பொழுதை காப்பது என்பதே.....!!!
ஐம்பதாயிரம் இருந்தால்
ஐபோன் வாங்க எண்ணம்.....
பணத்தில் வளர்பவனுக்கு....!!!
ஐந்தாயிரம் இருந்தால்
மாதத்தை சமாளிக்க எண்ணம்
வறுமையில் வாழ்பவனுக்கு....!!!
தலையெழுத்து என்று
ஏளனம் செய்பவர்கள்
ஏராளம் ஏராளம்...!!!!
பள்ளியில் நான்
படித்த பாடங்களில் கூட
சமச்சீர் பிறந்து விட்டது....!!!!
ஆனால் என்னவோ
வாழ்க்கைப் பாடம்
ஒவ்வொருவருக்கும்....
விதவிதமான பாடங்களை
ஏற்றத் தாழ்வுடனே
எப்பொழுதும் கற்பிக்கிறது.....!!!!
சமச்சீர் பாடத்தை
வாழ்க்கைப் பாடத்திலும்
கற்றுக் கொள்ளும் காலம் வருமா..??
அடுத்த தலைமுறக்காவது.......?
-Written by JERRY
ஜன்னலோர பயணம்
**********************
பேருந்தில் சன்னலோரமாய்
வேடிக்கை பார்த்த கண்கள்
கண்ட காட்சிகள் ஏராளம்.......!!!
சிந்திக்க வைத்த
ஒரு காட்சி சற்று
மனதை உலுக்கியது....!!!
இருபத்தைந்து வயது
வாலிபர்கள் இருவர்...
ஒருவர் பேருந்தின் உள்ளே....
மற்றொருவர் பேருந்தின் வெளியே...!!!!
பேருந்தினுள்
பணக்கார தோற்ற வாலிபன்....
அருகில் காதலி...
கடற்கரைக்கு பயணச்சீட்டு......
கவலையெல்லாம் எப்படி
பொழுதைக் கழிப்போம் என்பதே.....!!!
பேருந்தின் வெளியே
அழுக்கு உடை
அடுக்கிய மூட்டைகள்...
வண்டியழுத்தும் வாலிபன்....
கவலையெல்லாம் எப்படி
பொழுதை காப்பது என்பதே.....!!!
ஐம்பதாயிரம் இருந்தால்
ஐபோன் வாங்க எண்ணம்.....
பணத்தில் வளர்பவனுக்கு....!!!
ஐந்தாயிரம் இருந்தால்
மாதத்தை சமாளிக்க எண்ணம்
வறுமையில் வாழ்பவனுக்கு....!!!
தலையெழுத்து என்று
ஏளனம் செய்பவர்கள்
ஏராளம் ஏராளம்...!!!!
பள்ளியில் நான்
படித்த பாடங்களில் கூட
சமச்சீர் பிறந்து விட்டது....!!!!
ஆனால் என்னவோ
வாழ்க்கைப் பாடம்
ஒவ்வொருவருக்கும்....
விதவிதமான பாடங்களை
ஏற்றத் தாழ்வுடனே
எப்பொழுதும் கற்பிக்கிறது.....!!!!
சமச்சீர் பாடத்தை
வாழ்க்கைப் பாடத்திலும்
கற்றுக் கொள்ளும் காலம் வருமா..??
அடுத்த தலைமுறக்காவது.......?
-Written by JERRY
Monday, 11 June 2018
முதல் நாள்
********************
புதிய அனுபவம்
புதிய பிரிதல்
மழலையின் முதல்
கால்தடம் பள்ளியில்.....!!
வகுப்பறை வாசலில்
ஆசிரியரின் அழைப்பு
புதியதொரு மொழியாய்
உள்ளுக்குள் பயம்...!!!
அம்மாவின் கரங்களை
இருக்கமாக பிடித்த
பிஞ்சு கரங்கள்.....!!!!
அம்மா வாசல்லையே
உன்கூட உக்காந்திருப்பேன்
நீ அழாம படிச்சிட்டு வா
அம்மா இங்கயே இருக்கேன்-என்ற
சமாதானப் பேச்சு.....!!!
அழுது வடியும் கண்களோடு
வகுப்பறையில் மாணவனாய்
முதல் நாள் தொடக்கம்......!!!
பள்ளி வாசலை
கடந்து செல்லும் தருணம்....!!!
மகனின் கண்ணீரில்
பாசத்தின் வெளிப பாடும்...!!
பிள்ளையின் இலக்கை
தொடங்கி வைத்த
ஆனந்தத்தின் வெளிப்பாடும்.... !!!
வழிந்து ததும்பியது
ஆனந்த கண்ணீராய்....
அன்னையின் கண்களில்......!!!
-Written by JERRY
மழலையின் முதல்
கால்தடம் பள்ளியில்.....!!
வகுப்பறை வாசலில்
ஆசிரியரின் அழைப்பு
புதியதொரு மொழியாய்
உள்ளுக்குள் பயம்...!!!
அம்மாவின் கரங்களை
இருக்கமாக பிடித்த
பிஞ்சு கரங்கள்.....!!!!
அம்மா வாசல்லையே
உன்கூட உக்காந்திருப்பேன்
நீ அழாம படிச்சிட்டு வா
அம்மா இங்கயே இருக்கேன்-என்ற
சமாதானப் பேச்சு.....!!!
அழுது வடியும் கண்களோடு
வகுப்பறையில் மாணவனாய்
முதல் நாள் தொடக்கம்......!!!
பள்ளி வாசலை
கடந்து செல்லும் தருணம்....!!!
மகனின் கண்ணீரில்
பாசத்தின் வெளிப பாடும்...!!
பிள்ளையின் இலக்கை
தொடங்கி வைத்த
ஆனந்தத்தின் வெளிப்பாடும்.... !!!
வழிந்து ததும்பியது
ஆனந்த கண்ணீராய்....
அன்னையின் கண்களில்......!!!
-Written by JERRY
Tuesday, 5 June 2018
மனம் மட்டும் உண்டு
நல்லது செய்ய வேண்டும்...
நல்லது செய்ய வேண்டும்....
விரும்புகிறது உள்ளம்...!!!
பிச்சைக்காரனுக்கு பணம்கொடுக்க
சட்டென்று மனம் வரவில்லை....!
சில்லரையை உள்ளே மறைத்து
சில்லரையாக நடக்கிறது மனது.....!!
கீழே தவறி விழுந்தவனை
பட்டென்று தூக்க மனமில்லை...!
சிரித்து விழுந்தவரை
வேதனைப்படுத்துகிறது உள்ளம்...!!
பேருந்தில் அமர்ந்திருக்கையில்
எதிர்நிற்கும் மூதாட்டிக்கு..,
இடம்கொடுக்க மனமில்லை-எனக்கு
கால்வலிக்குமென்ற சுயநலம்....!!!
சாலைவிபத்தில் அடிபட்டவரைக்கண்டு
கண்கள் கலங்கினாலும் ...
நம்மால் என்ன முடியுமென்று.....
கூட்டத்தோடு வேடிக்கைபார்த்துவிட்டு...
விலகிச் செல்கிறது கால்கள்....!!!
எது நல்லது என்று
யோசிக்கத் தெரிந்தும்
யோசிக்க மனமில்லாமல்.....!
நல்லது செய்ய வேண்டுமென்ற
யோசனை மட்டும் மாறவில்லை.......!!!!
-written by JERRY
Subscribe to:
Comments (Atom)
-
எனக்கு நானிருக்கிறேன் - என்று எனக்கு நானே... எடுத்து சொல்லும் - பக்குவத்தை என்னிடம் தந்தது... என் தனிமை...! Written by JERRY
-
தினம்... தினம்... முட்டாள்களால்... முட்டாளாக்கப்பட்டு...! முட்டாளாக வாழும், நாம் தான்... முட்டாள் என்பதை... முட்டாள்தனமாக மறந்து, முட...
-
பருவங்களின் வளைவுகளில் (பெண்மை) அன்பை இதயத்தில் , சுமக்கும் காதலாகிறது ...! காதலை கட்டிலில் சுமக்கும் காமமாகிறது...! கருவை வயிற்றில் ...


