Saturday, 6 January 2018

பழைய சோறு

அன்னையே ...
அருகில் நீயிருந்து,
அமிழ்தமே கொடுத்தாலும்...
ருசித்த நாக்கு - அதை
ரசிக்க மறுத்தது...!

குறைகள் சொல்வதிலே,
கவனமாய் நின்றது...!

வேலை கிடைத்ததும் - சற்று
விலகிய தூரம் சென்று ,
விடுதியில் சேர்ந்தேன்...

பணம் கொடுத்ததும்,
பசிக்கு உணவு கிடைத்தது...

எங்கு சென்றும்
எள்ளளவும், ருசிவரவில்லையே...!

வாடிய உள்ளம்,
தேடி அலைகிறது...!

பழைய சோறு என்றாலும்...
பத்துமாதம் சுமந்தவளே -  உன்
கைப்பக்குவம் போதுமென்று,

குறை சொல்லிய வாய்க்கு,
நிறைவில்லாத உணவவே
வாய்பூட்டாக மாறியதே...!

ஏக்கமறிந்து அன்னையே - நீ
கட்டி அனுப்பிய பலகாரங்கள்...
மரணித்துவிட்ட என் நாக்கிற்கு - இன்று
மீண்டும் உயர் கொடுத்ததம்மா....!!

Written by JERRY

3 comments: