அன்னையே ...
அருகில் நீயிருந்து,
அமிழ்தமே கொடுத்தாலும்...
ருசித்த நாக்கு - அதை
ரசிக்க மறுத்தது...!
குறைகள் சொல்வதிலே,
கவனமாய் நின்றது...!
வேலை கிடைத்ததும் - சற்று
விலகிய தூரம் சென்று ,
விடுதியில் சேர்ந்தேன்...
பணம் கொடுத்ததும்,
பசிக்கு உணவு கிடைத்தது...
எங்கு சென்றும்
எள்ளளவும், ருசிவரவில்லையே...!
வாடிய உள்ளம்,
தேடி அலைகிறது...!
பழைய சோறு என்றாலும்...
பத்துமாதம் சுமந்தவளே - உன்
கைப்பக்குவம் போதுமென்று,
குறை சொல்லிய வாய்க்கு,
நிறைவில்லாத உணவவே
வாய்பூட்டாக மாறியதே...!
ஏக்கமறிந்து அன்னையே - நீ
கட்டி அனுப்பிய பலகாரங்கள்...
மரணித்துவிட்ட என் நாக்கிற்கு - இன்று
மீண்டும் உயர் கொடுத்ததம்மா....!!
Written by JERRY
Neenga ezhudhunadhu padikurapo andha scenes en kannu munadi vandhutu pochu... True words... Keep on going
ReplyDeleteThank u Dr
DeleteSuperb
ReplyDelete