பருவங்களின் வளைவுகளில்
(பெண்மை)
அன்பை இதயத்தில்,
சுமக்கும் காதலாகிறது...!
காதலை கட்டிலில்,
சுமக்கும் காமமாகிறது...!
கருவை வயிற்றில்,
சுமக்கும் தாய்மையாகிறது...!
துன்பங்களை தனக்குள்ளே,
சுமந்து... சுமந்து...
இன்பத்தை உறவுகளுக்குள்,
பகிர்ந்து... பகிர்ந்து...
இறப்புவரை தன்னலம்,
மறந்து...
குடும்பம் நலன் காண,
ஒளிதரும் மெழுகாகவே...
கரைந்து விடுகின்றது...!
Written by JERRY
No comments:
Post a Comment