Monday, 11 December 2017

பிச்சைக்காரி

கந்தல் உடையில்,
காவிய நாயகி...!

கூந்தல் சடையில்,
குடியேறிய அழுக்கு...!

வறுமையின் பிடியில்,
வளம் இழந்த மேனி...!

வெம்மையின் கொடுமையில்,
வெடிப்புற்ற பாதங்கள்...!

பசியின் கோரத்தில்,
திருவோடான கைகள்...!

விடியலின் தேடலில்,
பாவையவள் கண்கள்...!

இரவின் விடியலுக்கு அல்ல – அவள்
வாழ்வின் விடியலுக்கு...!!!

Written by JERRY

2 comments: