Thursday, 23 November 2017

சுதந்திரம்

சுதந்திர நாட்டில்,
பார்ப்பதற்கு உண்டு சுதந்திரம்...!
பேசுவதற்கு உண்டு சுதந்திரம்...!
கேட்பதற்கு உண்டு சுதந்திரம்...!

குருடனுக்கும்...
ஊமைக்கும்...
செவிடனுக்கும்...

சொன்னதை செய்வோம்,
சொல்லாததையும் செய்வோம் – என்று
ஏமாற்றும் அரசாங்கத்திற்கு உண்டு சுதந்திரம்...!

கடமையைச் செய்ய - சம்பளம்
போதாது என்று கையூட்டு வேண்டும்,
அலுவலருக்கும் உண்டு சுதந்திரம்...!

ஏழைகளுக்கு வறுமையை - மட்டும்
வைத்து வளமாக வாழ,
அதிகம் உண்டு சுதந்திரம்...!

முதல் மதிப்பெண் மாணவனுக்கும்,
முதல் பணக்கார மாணவனுக்கும்,
இட ஒததுக்கீடு சமம் - என்ற
சமத்துவத்தில் உண்டு சுதந்திரம்...!

தியாகிகள் தியாகம் செய்து,
பெற்ற சுதந்திரம்...!
தியாகம் செய்தது சுதந்திரத்தை,
அநியாயத்திற்கு சுதந்திரம்
வேண்டுபவர்களுக்கு...

இந்த நிலை மாறுவதற்கு,
காந்தியும்... பாரதியும்...
எங்கே மறைந்துள்ளனர்...!

தேடும் என் கண்களுக்கு,
சுதந்திரம் எங்கே..?
எப்போது கிடைக்கும் இப்போதய சுதந்திரம்.....

Written by JERRY


No comments:

Post a Comment