சிறுவயதில் குறும்புகளால்..
சில்மிசங்கள் செய்த நாட்கள்,
ஏராளமாய் இருக்கத்தான் செய்கிறது...!
பொறுப்புகள் பொறுப்பாக இல்லாவிட்டாலும்...
போட்டிகளில் பொறுப்புகள் பலசமயம்,
தலைதூக்கி நின்ற நாட்கள் அதிகம்...!
பள்ளிகளில் சிறுசேமிப்பு புத்தகங்கள்,
சேமிக்க கத்துக்கொடுத்த்தோ இல்லையோ...?
நண்பர்களை விட அதிகம் சேமிக்க வேண்டுமென்று,
மனதில் கிளர்சியை தூண்டியுள்ளது...!
மிட்டாயை கண்ட நாக்குகளுக்கு...
ஏமாற்றத்தை கொடுத்துவிட்டு எப்படியாவது,
அதிகம் சேமிக்க எனக்குள்,
ஆர்வத்தை வளர்த்துவிட்டது...!
இருபத்தைந்து பைசா துட்டுமிடாயில்...
ஐம்பது பைசா கிடைக்குமென்ற பேராசையில்,
ஏமாந்த நாட்கள் ஏராளம் என் வரலாற்றில்...!
ஒருநாள்...
அப்பாவின் சம்பள பணத்தில் சிறிதை அவர்,
அறியாமல் திருடிச்சென்று சேமிப்பு புத்தகத்தை,
வளர்ச்சியின் உச்சியில் சேர்த்துவிட்டேன்...!
திருடனை கண்டுபிடித்த போலீஸாய்...
வெளுத்து வாங்கிய தந்தையின் புரட்சியில்,
உண்மையை தானே உலரியது உதடுகள்...!
இரவில் கோவம் தணிந்து தந்தை மெதுவாய்,
தலையை நீவிக்கொண்டே பேசினார்...
வளர்சி என்பது விரைந்து கிடைத்துவிட்டால்...!
வலிகள் மிகுந்த வழிகள் மாறிப்போகும்...!!
தேவைகளை சுருக்கி கையிருப்பை,
காத்துக்கொள்ள கற்றுக்கொள்...!
வாழ்வில் உயர்ந்த உன்னை...
வளைத்துவிட எவருக்கும் துணிவிருக்காது – என்ற
வார்த்தைகளின் உண்மையை உணர்ந்து,
சேமிக்க திருடினாலும் அது,
திருட்டு திருட்டுதான் என்பதை உணர்ந்தேன்...!
சேமிக்கவும் சரியாக கற்றுக்கொண்டேன்...!!
அன்றைய அறிவுரை இன்றைய உலகை,
போராடி வெல்ல துணையாய் இருக்கிறது...!!!
Written by JERRY
No comments:
Post a Comment