Tuesday, 14 November 2017

என்னைப் பெற்றவளே

தவழும் போது நீ,
தழுவவில்லை..!

அழும்போது நீ,
அணைக்கவில்லை...!

சிரிக்கும் போது நீ,
சிலிர்க்கவில்லை...!

பசிக்கும் போது நீ,
பாலூட்டவில்லை...!

கொஞ்சும் மழலையை நீ,
ரசிக்கவில்லை...!

துன்பத்தில் நீ என்,
துணையாய் இல்லை...!

இன்பத்தை நான்,
கண்டதும் இல்லை...!

அனாதையென்றார்கள் – நீ
ஆதரவாய் இல்லை – நான்
பிறக்க மட்டும் ஏன்..?
காரணமாய் இருந்தாய்..!!

குப்பைத் தொட்டியில்,
குடிவைத்துவிடலாம் என்று...!
கருவறையில் இருந்து,
இறக்கி வைத்தாயோ...!!

என்னை பெற்றவளே...!!!

Written by JERRY

No comments:

Post a Comment