தவழும் போது நீ,
தழுவவில்லை..!
அழும்போது நீ,
அணைக்கவில்லை...!
சிரிக்கும் போது நீ,
சிலிர்க்கவில்லை...!
பசிக்கும் போது நீ,
பாலூட்டவில்லை...!
கொஞ்சும் மழலையை நீ,
ரசிக்கவில்லை...!
துன்பத்தில் நீ என்,
துணையாய் இல்லை...!
இன்பத்தை நான்,
கண்டதும் இல்லை...!
அனாதையென்றார்கள் – நீ
ஆதரவாய் இல்லை – நான்
பிறக்க மட்டும் ஏன்..?
காரணமாய் இருந்தாய்..!!
குப்பைத் தொட்டியில்,
குடிவைத்துவிடலாம் என்று...!
கருவறையில் இருந்து,
இறக்கி வைத்தாயோ...!!
என்னை பெற்றவளே...!!!
Written by JERRY
No comments:
Post a Comment