பல வருசத்துக்கு
முன்னாடி...
ஒரு கிராமத்துல
ஒரு பண்ணையார் இருந்தார்...
அவருக்கு
துணையா ஒரு வேலையாள்
கூடவே
இருப்பார்...
இருவருக்கு
ஒவ்வொரு ஆண் பிள்ளைகள்
குறிப்பிட்ட
வயது வந்ததும்
இருவரும்
அவரவர் அப்பாட்ட சொல்றாங்க...
நா தனியா
போய் சம்பாதிக்கப்போறேனு...!
உடனே
பண்ணையார்
தன் சொத்துல
இருந்து
அன்றைய
மதிப்பில் நூறு ரூபாய எடுத்துகொடுத்து
தொழில்
பண்ணச்சொல்றார்...!
அந்த
வேலையாளோ...
தான்
இதுவரை சேமித்து வைத்த ஒத்தரூபாய
மொத்தமா
எடுத்துக்கொடுத்து
இத வச்சி
பொழச்சிக்கோன்னு சொல்றார்...!!
என்னதான்
தங்களுக்கு ஏக்கர் கணக்குல
நிலம்
இருந்தாலும்... தனக்குன்னு சொந்தமா
நூறு
ரூபாயில ஐம்பது ரூபாய்க்கு நிலத்தை வாங்கி...
விவசாயம்
பண்ண முடிவு செய்தான்...
பண்ணையார்
மகன்...!
ஆனால்
வேலையாள் மகன்
ஒரு ரூபாய்ல
ஐம்பது பைசாவுக்கு
ஒரு சின்ன
நிலத்தை குத்தகைக்கு எடுத்தான்...!!
வழக்கம்
போல் பண்ணையார் மகன்
வேலையாள்
வைத்து வேலை பார்க்கிறான்...!
வேலையாள்
மகன் வேற வழியில்லாமல்
அவனே
இறங்கி வேலை பார்க்கிறான்...!!
நாட்கள்
நகர்கிறது...
அறுவடை
நாளும் வருகிறது...
நிலம்
பெரிது என்பதால்
கிடைத்த
மகசூலை மொத்த விலைக்கு விற்கிறான்
பண்ணையார்
மகன்...
ஆனால்
நிலம் சின்னது என்பதால்
கிடைத்த
மகசூலை... சந்தையில் சென்று
நேரடியாக
மக்களிடமே விற்கிறான்...
என்னதான்
நிலம் பெரியது...
அதன்
விளைச்சல் பெரியது என்றாலும்
வேலையாள்
சம்பளம் போக
கிடைத்தது
என்னவோ...
மொத்த
விலைக்கு விற்றதில்
கொஞ்ச
லாபம் தான் பண்ணையார் மகனுக்கு...
ஆனால்
நிலம் சின்னதென்றாலும்
வேலையாள்
கூலி, வாங்கி விற்பவன் லாபம்,
கிடைத்ததை
விற்ற லாபம் என பார்க்கும் போது...
பண்ணையார்
மகனுக்கு நூறு ருபாய் என்பது
தங்களது
சொத்தில் ஒரு பங்ககத்தான் தெரிந்தது...!
ஏழையின்
மகனுக்கு அந்த ஒரு ரூபாய்
தந்தையின்
உழைப்பு என புரிகிறது...!!
written
by *JERRY* 🍓

Good
ReplyDelete