Saturday, 11 November 2017

கடந்துபோன நாட்கள்

நண்பர்களுடன் சேர்ந்து,
நடந்து தேய்ந்த சாலை...

கை கோர்த்து நண்பர்களுடன்,
விளையாடிய வேளை...

உண்ணும்போது இடமாறும்,
உணவுப் பதார்த்தங்கள்...

ஆசிரியரை ஏமாற்றி,
கட் அடித்த வகுப்புகள்...

விளையாட்டுகளில் கலந்து,
வென்ற பரிசுகள்...

கல்லூரி கலைநிகழ்ச்சிகளில்,
கலாட்டா செய்த காட்சிகள்...

நண்பர்களோடு செய்த,
செல்லச் சண்டைகள்...

தவறுகளுக்காக முனிவரிடம்,
எழுதிக்கொடுத்த அப்பாலஜிகள்...

காதலர்களுக்கு பூங்காவான,
கல்லூரி மைதான்கள்...

சிறு சிறு கவிதைகளுடன்,
கூடிய காதல் மடல்கள்...

கடைசிநாளின் பிரிவின் போது,
எடுத்துக்கொண்ட புகைப்படங்கள்...

பிரிவை ஏற்க விரும்பாத,
உள்ளத்தின் வேதனைகள்...

நடத்துனரின் விசில் சப்தம்,
கேட்டு விழித்தேன்...

கண்களின் ஓரம்,
கண்ணீராய் வழிந்தது...!
நட்பினது நினைவுகள்...!!

பேருந்திலிருந்து இறங்கினேன்,
பிரிவின் வலியில் - நட்பின்
ஆழம் அறிந்தேன்...!

Written by JERRY

No comments:

Post a Comment